தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! |
நடிப்பது என் பணி, அதை செய்து வருகிறேன், அதை செய்ய விடுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரசிகர்களுடனான சந்திப்பிற்கு பிறகு ரஜினியை பற்றிய செய்தி தான் அதிகம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் அவர் அரசியலுக்கு வருவது போன்ற ரீதியில் பேசியது தான். இதுதொடர்பாக டிவி, சமூகவலைதளம் என விவாதங்கள் போய் கொண்டு இருக்கின்றன. அதோடு அவர் அரசியலுக்கு வர ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன.
இந்நிலையில் ஜூலை மாதம், ரஜினி புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என அவரது சகோதரர் சத்யநாராயணராவ் பெங்களூரில் செய்தி வெளியிட்டது பரபரப்பானது. இதுதொடர்பாக ரஜினி, பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாக இன்று(மே 27-ம் தேதி) மதியம் முதலே பரபரப்பானது. ஆனால் அப்படியொரு செய்தி தவறானது என்றும் கூறப்பட்டது.
ஆனால் மாலையில் ரஜினி, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "காலா படப்பிடிப்பிற்காக மும்பை செல்கிறேன். நடிப்பது என் வேலை, இது உங்கள்(பத்திரிகையாளர்கள்) வேலை. எனது வேலையை செய்ய விடுங்கள்" என்றார்.
இருதினங்களுக்கு முன்னர் ரஜினி, அடுத்து நடிக்கவுள்ள காலா படத்தின் அறிவிப்பு வெளியானது. இதன் படப்பிடிப்பு நாளை(மே 27-ம் தேதி) முதல் மும்பையில் துவங்க இருக்கிறது. இதற்காக அவர் மும்பை புறப்பட்டு செல்ல உள்ளார். காலா படத்தை கபாலி புகழ் ரஞ்சித் இயக்க, அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கிறார்.