தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள படம் தமிழ், ஹிந்தி இரண்டு மொழிகளிலும் உருவாக இருக்கிறது. ரொமான்ட்டிக் படமாக உருவாக உள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் முக்கிய ரோலில் நடிக்கிறார். இதுதொடர்பாக ஐஸ்வர்யாவிடம் பேசியிருக்கிறார் மணிரத்னம். அவரும் சம்மதம் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மணிரத்னத்தின் 'இருவர்', 'குரு', 'ராவணன்' ஆகிய படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், மீண்டும் இவரது படத்தில் இணைய உள்ளார். ஐஸ்வர்யா ராய், கடைசியாக தமிழில் ரஜினியுடன் 'எந்திரன்' படத்தில் நடித்திருந்தார். இப்போது 7 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார்.