தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'காலா' படத்தின் முதல் பார்வை வெளியானதிலிருந்தே அந்தப் படம் பற்றிய கருத்துகள் ஆரம்பமாகிவிட்டன. குறிப்பாக படத்தின் போஸ்டர்களில் பல குறியீடுகள் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பா.ரஞ்சித், ரஜினிகாந்த் முதன் முறையாக இணைந்த 'கபாலி' படம் நேரடியாக இல்லை என்றாலும் மறைமுகமாக தலித்தியம் பற்றிப் பேசிய படமாக இருந்தது. இந்த 'காலா' படமும் அப்படித்தான் இருக்கப் போகிறது என பேச்சு எழுந்துள்ளது.
படத்தின் போஸ்டரிலேயே அது மும்பை பின்னணி கொண்ட கதைதான் என்பது தெளிவாகத் தெரிகிறது. திருநெல்வேலியிலிருந்து மும்பை சென்று செட்டிலான ஒரு தாதாவைப் பற்றிய கதை என படத்தின் கதை பற்றி வெளியே தகவல் கசிந்துள்ளது.
மும்பை பின்னணியில் பல தாதா கதைகள் தமிழில் ஏற்கெனவே வெளிவந்துள்ளன. சூர்யாவைக் கூட 'அஞ்சான்' படத்தில் தாதாவாகக் காட்டினார்கள். ஆனால், அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வேறு கதை. 'நாயகன், பாட்ஷா' படங்களைப் போன்ற ஒரு அழுத்தமான தாதா கதைகள் அதன் பின் தமிழில் வரவில்லை. அஜித் கூட 'ஜனா' படத்தில் தாதாவாகவும், விஜய் 'நெஞ்சினிலே' படத்தில் மும்பை அடியாளாகவும் நடித்துள்ளார்கள்.
'காலா' படம் பற்றிய அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே அது மும்பையில் தாதாவாக வாழ்ந்த ஹாஜி மஸ்தான் கதை என செய்திகள் வெளிவந்தன. மஸ்தான் வாரிசு என ஒருவர் ரஜினிக்கு கடிதம் அனுப்பியதும், அதைத் தொடர்ந்து தயாரிப்பு தரப்பில் அதற்கு மறுப்பும் தெரிவித்தார்கள்.
'காலா' படம் ஒரு கற்பனைக் கதைதான் என்று ஒதுக்கி விட முடியாது. 'கபாலி' படத்தில் சொன்னதைப் போன்றே படத்திலும் நிஜ வாழ்க்கைக்குத் தொடர்புடைய பல விஷயங்களை ரஞ்சித் இந்தப் படத்திலும் வைக்கப் போகிறார் என்பது மட்டும் நிச்சயம்.