பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
அரசியல் குறித்து பல விமர்சனங்களை கூறி வரும் நடிகர் ஆனந்த்ராஜ், நடிகர் ரஜினியை இன்று(மே 27-ம் தேதி) திடீரென சந்தித்து பேசினார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார் ரஜினி. அப்போது ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசுகையில்; சிஸ்டம் சரியில்லையே, ஜனநாயகம் கெட்டு கிடக்கிறதே என்றும், அரசியலில் ஈடுபடுவது என்பது ஆண்டவன் தீர்மானிப்பான் என்றார். மேலும் சில ரசிகர்களுக்கு போருக்கு தயாராகுங்கள் என அரசியல் குறித்து மறைமுகமாகவும் தெரிவித்திருந்தார். ரஜினி அரசியலுக்கு வருவதற்கு சிலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுகவிலிருந்து விலகிய நடிகர் ஆனந்த்ராஜ், ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஆனந்த்ராஜ் அரசியல் நிலைமை குறித்து பேசியிருப்பார் என நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவிக்கிறது.