'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கைதி எண் -150 படத்தில் நடித்த சிரஞ்சீவி, அடுத்து உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடிக்கிறார். தெலுங்குப்பட டைரக்டர் சுரேந்திர ரெட்டி இயக்கும் இந்த படம் சுதந்திர போராட்ட வீரரின் கதையில் உருவாகிறது. இந்த படத்திற்காக பராச்சூரி சகோதரர்கள் மற்றும் சில எழுத்தாளர்களும் இணைந்து கதையை ரெடி பண்ணியிருக்கிறார்களாம்.
அதோடு, ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், கலை இயக்குனர் ராஜீவன் ஆகியோர் இணைந்துள்ள இந்த படத்தில் சிரஞ்சீவியின் தோற்றங்களை பல்வேறு கோணங்களில் சித்தரிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக சில ஓவியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள், கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் ஏற்ப சிரஞ்சீவியை எந்தமாதிரியான கோணங்களில் வெளிப்படுத்தலாம் என்று ஓவியங்களை வரைந்து கொண்டிருக்கிறார்களாம். அதில் சிறந்த ஓவியங்களை தேர்வு செய்து அந்த கெட்டப்பில் சிரஞ்சீவியை இந்த படத்தில் நடிக்க வைக்கிறாராம் சுரேந்தர் ரெட்டி.