பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருந்தவர் ஸ்ரீசாந்த். பெட்டிங் ஊழலில் சிக்கி அணியிலிருந்து நீக்கப்பட்ட ஸ்ரீசாந்த் தற்போது சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்க டீம் 5 என்ற படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் தயாராகிறது. ரெட் கார்பெட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ராஜ் ஜக்கரியாஸ் தயாரிக்கிறார். நிக்கி கல்ராணி, ஸ்ரீசாந்த் ஜோடியாக நடிக்கிறார், மலையாள நடிகை பேர்லேமேனி, மராட்டிய நடிகர் தேஷ் பாண்டே ஆகியோரும் நடிக்கிறார்கள். சைஜித் ஒளிப்பதிவு செய்கிறார், கோபிசுந்தர் இசை அமைக்கிறார். சுரேஷ் கோவிந்த் இயக்குகிறார். படம் பற்றி சுரேஷ் கூறியதாவது:
இந்த படம் இந்திய சினிமாவிற்கு புது மாதிரியான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும். பைக் ஸ்டன்ட்டை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பைக் ஸ்டன்ட் ஒரு தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கு விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விஷயம் மக்களுக்கு பெரிதாக போய் சேர வில்லை. இந்த படத்தின் மூலம் இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறது என்று மக்களுக்கு தெரியவரும்.
ஒரு குழுவிற்கு ஐந்து பேர் இருப்பார்கள். இது போல் பல குழுக்கள் இருக்கும். அதில் ரேஸ், வீலிங் போன்ற சாகசங்களும் இடம்பெறும். இதில் வெல்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஸ்ரீசாந்த், நிக்கிகல்ராணி, பேர்லேமேனி, தேஷ் பாண்டே இந்த நான்கு நண்பர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள் மற்றும் காதல், காமெடி, ஆக்ஷ்ன், செண்டிமெண்ட் கலந்து உருவாகி வருகிறது. படம் ஜூன் மாதம் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளியாகிறது. படப்பிடிப்பு கொச்சி, பெங்களூர், கோவா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. புது மாதிரியான எந்த கதையையும் மக்கள் வரவேற்பார்கள். இந்த கதையையும் மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்றார்.