‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கே.தங்கவேலு என்பவர் தயாரிப்பில், ராசா விக்ரம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மாய மோகினி. இதில் குஷ்புவின் தம்பி அப்துல்லா, சாரிகா, ஜோதிஷா உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் கே.ஆர்.விஜயாக பெண் சாமியாராக நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் பெண் சாமியாராக நடித்தது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்தார் கே.ஆர்.விஜயா. அவர் கூறியதாவது:
நான் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் கேட்டு வந்தார்கள். சின்ன கேரக்டர்களில் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டேன். இது நிஜத்தில் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்த ஒரு பெண் துறவி கேரக்டர் என்றார்கள். அப்படியானால் அதுபற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னேன். அவர்கள், என்னை அந்த துறவியின் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துக் சென்று காட்டினார்கள். கோவிலுக்கும் கூட்டிச் சென்றார்கள். அவற்றை பார்த்து நம்பிக்கை வந்த பிறகுதான் ஒரு புனிதமான பெண்ணின் கேரக்டரில் நடிக்கிறோம் என்ற நம்பிக்கை வந்தது, நடிக்க ஒப்புக் கொண்டேன். என்றார்.