கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
கே.தங்கவேலு என்பவர் தயாரிப்பில், ராசா விக்ரம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மாய மோகினி. இதில் குஷ்புவின் தம்பி அப்துல்லா, சாரிகா, ஜோதிஷா உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் கே.ஆர்.விஜயாக பெண் சாமியாராக நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் பெண் சாமியாராக நடித்தது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்தார் கே.ஆர்.விஜயா. அவர் கூறியதாவது:
நான் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் கேட்டு வந்தார்கள். சின்ன கேரக்டர்களில் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டேன். இது நிஜத்தில் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்த ஒரு பெண் துறவி கேரக்டர் என்றார்கள். அப்படியானால் அதுபற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னேன். அவர்கள், என்னை அந்த துறவியின் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துக் சென்று காட்டினார்கள். கோவிலுக்கும் கூட்டிச் சென்றார்கள். அவற்றை பார்த்து நம்பிக்கை வந்த பிறகுதான் ஒரு புனிதமான பெண்ணின் கேரக்டரில் நடிக்கிறோம் என்ற நம்பிக்கை வந்தது, நடிக்க ஒப்புக் கொண்டேன். என்றார்.