இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி |
வெளி உலகத்திற்கு பளபளப்பாக தெரியும் ஐ.டி கம்பெனிகளில் நடக்கும் முறைகேடுகள், அவற்றால் வாழ்க்கை இழக்கும் இளைஞர்கள் என அதன் கருப்பு பக்கத்தை காட்டும் படமாக உருவாகி உள்ளது விளையாட்டு ஆரம்பம். சாட்டை யுவன், ஸ்ரவியா, ரியாஸ்கான், பானுசந்தர், எலிசெபத் உள்பட பலர் நடித்துள்ளனர். அருண்மொழி சோழன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். படத்தின் கதையை சாட்டை யுவனின் தந்தை பெரோஸ்கான் எழுதி உள்ளார். மேக் 56 ஸ்டூடியோ சார்பில் ஆனந்த் உதார்கர், கார்த்திகேயன் தயாரித்துள்ளனர். ஆர்.ஆனந்த், ஏ.ஆர்.சூரியன் இருவரும் இணைந்து இயக்கி உள்ளனர். படத்தை பற்றி அவர்கள் கூறியதாவது:
இன்று ஐ.டி., கம்பெனிகளில் வேலை செய்பவர்களைப் பற்றிய பதிவு தான் இந்தப் படம். ஆரம்பத்தில் ஒரு லட்சம் இரண்டு லட்சம் என்று சம்பளம் கைக்கு வரும் போது சந்தோஷம் தலை விரித்தாடும், இது நிரந்தரம் என்று நினைத்து விடுகிறார்கள். உடனே கடன் வாங்கி வீடு கார் என்று ஆடம்பரத்துக்கு மாறி விடுகிறார்கள். வாழ்க்கை ஸ்மூத்தாகப் போய் கொண்டிருக்கும் போது திடீரென்று கம்பெனி ஆட் குறைப்பு என்றும் பொருளாதார நெருக்கடி என்று சொல்லி வேலையை விட்டு நீக்கும் போதோ, இல்லை கம்பெனியையே மூடி விடும் நேரத்திலோ ஒவ்வொருவருக்கும் மன உளைச்சல். வீட்டுக்கு டியூ, காருக்கு டியூ, ஸ்கூல் பீஸ் என்று தடுமாற்றம். அவர்களை தற்கொலை வரை தூண்டி விடுகிறது. இதனை மையமாக கொண்டு படம் தயாராகி உள்ளது என்றார்கள்.