இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி |
நடிகர் திலகம் சிவாஜியின் ஆஸ்தான இயக்குனர் சி.வி.ராஜேந்திரன். சிவாஜியை வைத்து 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். அவர் இந்தியில் வெளியான காளிச்சரன் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பினார். அதில் சிவாஜி நடிப்பது உறுதியானது. அந்தப் படத்தில் சிவாஜி கேரக்டருக்கு இணையான இன்னொரு கேரக்டர் ஒன்று இருந்தது. இந்த கேரக்டருக்கு அப்போது முன்னணியில் இருந்த பல ஹீரோக்கள் பரிசீலிக்கப்பட்டார்கள். ஆனால் யாரும் சரியாக இல்லை.
ஒரு நாள் சி.வி.ராஜேந்திரன், சிவாஜி வீட்டுக்கு சென்றபோது பிரபு அங்கு ஈட்டி எரிதல் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்தார். அவரின் கட்டுமஸ்தான உடம்பைக் கண்ட சி.வி.ராஜேந்திரன், பிரபுதான் சிவாஜியுடன் நடிக்க சரியானவர் என்று முடிவு செய்தார். சி.வி.ராஜேந்திரனும், சிவாஜியின் தம்பி சண்முகமும், பிரபுவை அழைத்துக் கொண்டு போய் சிவாஜி முன் நிறுத்தினார்கள். "அண்ணே இவர்தான் சங்கிலி படத்தில் உங்களுடன் நடிப்பவர்" என்றார்கள், சிவாஜிக்கு அதிர்ச்சி.
"எம் புள்ளையையும் அரிதாரம் பூசச் சொல்றீங்களா. நான் தான் போலீசா நடிச்சேன். அவனையாவது நிஜத்துல போலீஸ் ஆக்கி பாக்கணும்னு நினைச்சிட்டிருக்கேன். அவனையும் நடிகனாக்க பார்க்குறீங்களா?" என்று கோபப்பட்டிருக்கிறார். பிறகு ஒரு வழியாக சமாளித்து சம்மதிக்க வைத்தார்கள். "இந்த படத்துல எப்படி நடிக்கிறான்னு பார்ப்பேன். நல்லா நடிக்கலேன்னா ஷூட்டிங் பக்கமே அவன் வரக்கூடாது" என்ற நிபந்தனையோடு சம்மதித்தார்.
சங்கிலி படத்தில் பிரமாதமாக நடித்தார் பிரபு. அதனால் சிவாஜி, பிரபு தொடர்ந்து நடிக்க சம்மதித்தார். இருவரும் இணைந்த சந்திப்பு, மிருதங்க சக்ரவர்த்தி, வெள்ளை ரோஜா படங்களில் நடித்தனர். அதன்பிறகு பிரபு தனக்கென தனி பாதை அமைத்துக் கொண்டு 200 படங்களில் நடித்து முடித்து விட்டார்.