பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
எதைக் கேட்டாலும், அக் ஷய் குமார் பற்றியே மூச்சு விடாமல் பேசுகிறார், சோனம் கபூர். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும், பத்மம் என்ற படத்தை, இயக்குனர் பால்கி இயக்குகிறார்.
தமிழகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரை மையமாக வைத்து தயாராகியுள்ளது இந்த படம். இதுகுறித்து சோனம் கூறுகையில், 'சமூக பிரச்னைகளை மையமாக வைத்து தயாராகும் படங்களில், அக் ஷய் குமார் அதிகம் நடிக்கிறார். வசூலை குவிப்பதற்காக, மசாலா படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில், அக் ஷய் குமாரின் இந்த செயல், பாராட்டுக்குரியது' என, புகழ்ந்து தள்ளுகிறார்.
அதேபோல், இயக்குனர் பால்கியை பற்றி கூறும் போது, 'படப்பிடிப்பில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார், பால்கி. இப்போது படப்பிடிப்பு முடிந்து விட்டதால், அவரை, ரொம்பவே, 'மிஸ்' பண்ணுகிறேன்' என்கிறார். வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்காகவே, சக நடிகரையும், இயக்குனரையும், சோனம் கபூர் புகழ்ந்து தள்ளுகிறார் என்கிறது, பாலிவுட் வட்டாரங்கள்.