இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ரஜினி எடுக்கும் எந்த முடிவும் சரியாகத்தான் இருக்கும் என்கிறார் நடிகரும், அவரது மருமகனுமான தனுஷ். நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்து கொண்டார். அப்போது ரசிகர்களிடத்தில் பேசிய ரஜினி, நான் என்னவாக வேண்டும் என்பதை ஆண்டவன் தான் தீர்மானிக்க வேண்டும், அரசியலில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் என்னை விட்டு இப்போதே விலகிவிடுங்கள், போர் வரும் போது பார்த்து கொள்ளலாம், போருக்கு தயாராகுங்கள்... என்று தனது அரசியல் பற்றி பல்வேறு விஷயங்களை பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து பலரும் ரஜினியை விமர்சித்தும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் தனுஷிடம், ரஜினியை பற்றி ஏதாவது சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் உங்களது குடும்பத்திற்கு ஏதேனும் அழுத்தம் இருக்கிறதா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். இதற்கு பதிலளித்த தனுஷ், ரஜினி எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இதனால் எங்களது குடும்பத்தில் எந்த அழுத்தமும் இல்லை என்றார்.