இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நடிகர் சிரஞ்சீவி மீது அவதூறு பரப்பியதக நடிகர் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி நடிகை ஜீவிதாவுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரும், அவருடைய மனைவி நடிகை ஜீவிதாவும் சமீபத்தில் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, நடிகர் சிரஞ்சீவி நடத்தும் அறக்கட்டளையிலும், ரத்த வங்கியிலும் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டினர்.
இதனால் அவர்கள் மீது சிரஞ்சீவியின் மைத்துனரும், பட அதிபருமான அல்லு அரவிந்த், ஐதராபாத் 17வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முதல் நோக்கிலேயே குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக கருதியதால், ராஜசேகரும், ஜீவிதாவும் பிப்ரவரி 9ம்தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.