திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்தபோது அரசியல் குறித்த சில விசயங்களையும் பேசினார். ஆனால் இன்னும் அவர் வருவேனா வர மாட்டேனோ என்பதை தெளிவுபடுத்தவில்லை. ஒருவேளை வந்தால்... என்றுதான் பேசினார். அதற்குள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் ஒலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி, நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையிலும் டக்கென முடிவெடுக்கும் திறன் வேண்டும். வருவேனா மாட்டேனா என்பதையே வருடக்கணக்கில் யோசிப்பவரால் எப்படி சாத்தியமாகும் என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டவர், போர் போர் என்று சொல்லி போர் அடிக்காதீங்க என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு நறுக்கென்று சிலருக்கு பதில் கொடுத்தார் கஸ்தூரி. அதில் ஒரு ரசிகர்கள் திரைத்துறையில் இருந்து கொண்டே இவ்வளவு கேவலமாக ரஜினியை விமர்சிப்பது சரியா...? என்று கேட்க, அதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி, "தற்போது, நான் சிறுவயதில் இருந்தே ரஜினியின் ரசிகை. விரக்தியில் அப்படி விமர்சித்து விட்டேன். எல்லோரது மனதிலும் இருக்கிற ஆதங்கத்தைதான் நான் சொல்லியிருக்கிறேன்" என்று டுவிட் செய்துள்ளார்.