ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சர்ச்சைக்குரிய டேம் 999 ஆங்கிலத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணை உடைவது போன்று சித்தரிக்கப்பட்ட ஆங்கில திரைப்படமான டேம் 999 திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதற்கு தமிழ் ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி அந்த திரைப்படத்தை திரையிட நவம்பர் 24ம்தேதி தமிழக அரசு தடை விதித்தது. முதலில் 2 வாரங்கள் தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரைப்படத்தின் இயக்குநர் சோஹன்ராய் தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், திரைப்படத்திற்கான தடையை ஏன் நீக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விளக்க மளிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை சென்னை வந்து தலைமை செயலகத்தில் உள்துறை செயலரை சந்தித்து விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் திரைப்படத்திற்கான தடையை தமிழக அரசு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இந்த தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள சோஹன்ராய், நாங்கள் உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை, என்று கூறியுள்ளார்.