'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்கிற பெருமையை பெற்றவர் ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி.. பழம்பெரும் இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் மகளான இவர், பாக்யராஜ் இயக்கிய சின்னவீடு' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, பின்னர் விஜயகாந்த், சத்யராஜ், பிரபு என முன்னணி நடிகர்களின் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். 1995ல் எஸ்.பி.பி மற்றும் ரகுமான் இருவரையும் கதாநாயகர்களாக வைத்து 'பாட்டு பாடவா' என்கிற படத்தை இயக்கி ஒரு இயக்குனராகவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
அதன்பின் நேரடி சினிமாவை விட்டு கொஞ்சம் ஒதுங்கியே இருந்த பி.ஆர்.விஜயலட்சுமி, இப்போது 22 வருடங்கள் கழித்து மீண்டு இயக்குனர் தொப்பியை அணிய இருக்கிறார். வழக்கம்போல ஒரு புதுவிதமான காதல் கதையுடன் களமிறங்கியுள்ள இவர், மலையாள சினிமாவில் தற்போது கவனத்தை ஈர்த்து வரும் டொவினோ தாமஸ் என்பவரை இந்தப்படத்தின் கதாநாயகன் ஆக்கியதன் மூலம் தமிழில் அறிமுகப்படுத்துகிறார். கதாநாயகியாக பியா பாஜ்பாய் நடிக்கிறார். இன்னொரு ஆச்சர்யமான விஷயம், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.