ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தற்போது நாகசைதன்யாவுக்கு ஜோடியாக தெலுங்கில் 'ராராண்டோய் வெடுக்க சூடம்' என்கிற படத்தில் நடித்துள்ளார் ராகுல் பிரீத் சிங்.. இந்தப்படத்தில் தனது கேரக்டர் பற்றி கூறியுள்ள ராகுல் பிரீத் சிங், “மற்ற படங்களைப்போல வெறும் கதாநாயகியாக வந்தோம், போனோம் என்றில்லாமல் நாயகன் நாகசைதன்யாவுக்கு இணையாக எனது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது” என சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார்.. தற்போது இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ள நிலையில் தனது கேரக்டர் குறித்து விரிவாக பேசியுள்ள ராகுல் பிரீத் இந்தப்படத்தின் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணாவை எச்சரித்துள்ளதாகவும் கூறினார்.
இந்தப்படத்தில் ராகுலின் கதாபாத்திரத்தின் பெயர் பிரம்மரம்பா.. இதுநாள் வரை தான் நடித்த படங்களில் தனது கேரக்டர்களின் பெயர்கள் ஒன்றிரண்டு மட்டுமே ஞாபகத்தில் இருக்கின்றன என கூறிய ராகுல் பிரீத் சிங், இந்தப்படத்தின் கேரக்டர் எனக்கு என்றென்றும் மறக்காமல் நினைவுடன் இருக்கும். வெறும் பெயருக்காக மட்டுமல்ல, இத்தனை நாட்களில் நான் நடித்த படங்களில் இதுபோன்ற ஒரு கேரக்டர் எனக்கு கிடைக்கவே இல்லை” என கூறியுள்ளார். அப்படி ஒரு கேரக்டரை எனக்கு கொடுத்த இயக்குனர் கல்யான் கிருஷ்ணாவிடம் “உங்களது அடுத்த படத்திலும் நான் தான் கதாநாயகியாக நடிப்பேன்.. வேறு யாரையும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என எச்சரித்துள்ளேன்” என கூறியுள்ளார் ராகுல் பிரீத் சிங்.