ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிபிராஜ் தனது நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்து நடிக்கும் படம் சத்யா. இது தெலுங்கு ஷனம் படத்தின் ரீமேக். சைத்தான் படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சத்யா என்று பெயர் வைத்திருப்பதால் கமல் பாணியில் ஒரு லிப் லாக் முத்தக் காட்சியும் வைத்திருந்தார் இயக்குனர். ஆனால் அந்த காட்சியில் நடிக்க மறுத்திருக்கிறார் சிபிராஜ். இதுகுறித்து படத்தின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
கமல் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சத்யா. கமலுக்கு சத்யா, அவருடைய கேரியரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதேப்போல் இந்த சத்யா, சிபிராஜுக்கு அவருடைய கேரியரில் நிச்சயம் திருப்புமுனை படமாக இருக்கும். சத்யா படத்தின் தலைப்பு “ராஜ்கமல் இன்டர்நேஷனல்“ நிறுவனத்தின் பெயரில் பதிவாகி இருந்தது. கமல் சாரிடம் நாங்கள் இந்த தலைப்பு எங்கள் படத்துக்கு சரியாக இருக்கும் என்று கேட்டவுடன் எங்களுக்கு “சத்யா“ என்ற மாஸ் டைட்டிலை கையெழுத்திட்டு கொடுத்தார்.
இது ஒரு கிரைம் த்ரில்லர். இதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கியுள்ளோம். படத்தில் இடம் பெறும் காட்சி ஒன்றுக்கு லிப் லாக் முத்த காட்சி தேவையானதாக இருந்தது. சிபிராஜிடம் நான் அந்த காட்சியில் நடிப்பது பற்றி கூறியதும் என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். நான் எவ்வளவோ அவரிடம் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை விளக்கியும் அதில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அந்த லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்ததற்கான காரணம் அவருடைய மகன், அதை திரையரங்கில் பார்த்தால் நன்றாக இருக்காது என்பதால் தான். என்றார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி.