பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவில் பத்தில் இரண்டு படங்களுக்கு ரஜினி நடித்த பழைய படங்கள், அவரது படத்தில் ஹிட்டான பாடல் வரிகள், அதுவும் இல்லையென்றால் அவர் பேசிய பஞ்ச் வசனங்கள் என ஏதோ ஒருவகையில் டைட்டிலாக மாறி விடுகின்றன. அந்தவகையில் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி' படத்தின் 'நெருப்புடா' பாடல் வரியை விக்ரம் பிரபு தனது படத்துக்கு பயன்படுத்திக்கொண்டார்.. அந்தப்படத்தின் இன்னொரு சூப்பர்ஹிட் பாடலான 'மாயநதி' மலையாள படம் ஒன்றுக்கு டைட்டிலாக மாறியுள்ளது.
ஆம். அந்த பாடலின் முதல் வார்த்தையான 'மாயநதி'யை மலையாள இயக்குனரான ஆஷிக் அபு, தான் புதிதாக இயக்கவுள்ள படத்திற்கு டைட்டிலாக சூட்டியுள்ளார். இந்தப்படத்தில் மலையாள சினிமாவில் வளர்ந்து இளம் ஹீரோவான டொவினோ தாமஸ் கதாநயாகனாக நடிக்கிறார். பஹத் பாசில் நடித்து ஹிட்டான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்திற்கு கதை எழுதிய ஷ்யாம் புஷ்கரன் தான் இந்தப்படத்தின் ஸ்க்ரிப்ட்டை எழுதியுள்ளார். படத்தின் கதைக்கான கருவை இயக்குனர் அமல் நீரத் கொடுத்துள்ளார்.