கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
ரிச்சா கங்கோபாத்யாயா.... தமிழ் ரசிகர்கள் இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள் என்று நினைப்போமாக. 2010ம் ஆண்டு 'லீடர்' தெலுங்குப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரிச்சா. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'மயக்கம் என்ன' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். அதே வருடத்தில் சிம்பு ஜோடியாக 'ஒஸ்தி' படத்திலும் நடித்தார். இரண்டு படங்களிலும் நடித்திருந்தாலும் தன்னுடைய கிளாமர் தோற்றத்தால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன் பின் சில தெலுங்குப் படங்களில் நடித்தவர் 2013ம் ஆண்டுடன் நடிப்பதை நிறுத்தி விட்டு மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றுவிட்டார்.
வாஷிங்டன் யூனிவர்சிட்டியின் கீழ் உள்ள ஓலின் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ டிகிரி படிப்பை சமீபத்தில் முடித்து பட்டம் வாங்கியுள்ளார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவரான ரிச்சா, இந்தியாவிற்கு வந்து சில விளம்பரப் படங்களில் நடித்தார். அப்படியே திரையுலகிலும் நுழைந்தார். குறுகிய காலத்திலேயே தெலுங்கில் பிரபாஸ், நாகார்ஜுனா, தமிழில் தனுஷ், சிம்பு ஆகியோருடன் நடித்தார். இருந்தாலும் மேலும் நடிப்பைத் தொடராமல் படிப்பைத் தொடர வேண்டும் என்று அமெரிக்காவிற்கே திரும்பிவிட்டார்.
ரசிகர்கள் எப்போது மீண்டும் நடிக்க வருவீர்கள் என்று கேட்டாலும் இன்னும் அது பற்றி ரிச்சா எதுவும் சொல்லவில்லை. எம்பிஏ முடித்தவர் இனி நடிக்கவா வரப் போகிறார். அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனங்களில் உயர் பதவியில் வேலைக்குப் போய்விட மாட்டாரா...?.