தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நித்தியானந்தம் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் தொடர் சுமங்கலி. திவ்யா லீடு ரோலில் நடித்து வரும் இந்த தொடரில் பிரதீப் நாயகனாக நடித்து வந்தார். ஆனால் கடந்த மாதம் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதையடுத்து கதாநாயகன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லாமலேயே சுமங்கலி தொடரின் எபிசோடுகள் நகர்த்தப்பட்டு வந்தன. அதோடு, பிரதீப் நடித்த கதாபாத்திரத்தில் எந்த நடிகரை நடிக்க வைக்கலாம் என்கிற பரிசீலணையும் நடந்து வந்தது. இந்த நிலையில், தற்போது சுஜித் என்ற கன்னட சீரியல் நடிகர் சுமங்கலி தொடரில் பிரதீப் நடித்து வந்த கேரக்டருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் சில தினங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.