ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படம் குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் தேஜா-சமந்தா நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் உள்ள பொது இடங்களில் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது அந்த பகுதியில் கடும் வெப்பம் நிலவி வருகிறதாம். இதனால் ராம்சரண், சமந்தா, அனுபமா, பிரகாஷ்ராஜ் மட்டுமின்றி மொத்த படக்குழுவும் அனல் பறக்கும் வெயிலால் ரொம்பவே அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இதையடுத்து, தற்காலிகமாக அந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து எப்போது படப்பிடிப்பு தொடங்கப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை. மேலும், எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்த மித்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம், தற்போது பட வெளியீடை செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது.