'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் தாடி பாலாஜி. தற்போது விஜய் டி.வியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இவருக்கும், நித்யாவுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு போர்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில வருடங்களாகவே தாடி பாலாஜிக்கும், நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பு தன் கணவர் தன்னை தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து உதைப்பதாக நித்யா ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார். ஆனால் பாலாஜி நாங்கள் ஒற்றமையாகத்தான் இருக்கிறோம் என்று இருவரும் ஜோடியாக இருக்கும் போட்டோவுடன் இன்னொரு பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார்.
இந்த நிலையில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா, மாதவரம் போலீசில் நேற்று கணவர் மீது புகார் மனு அளித்தார். அதில் தன் கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், ஜாதி பெயரைச் சொல்லி திட்டுவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புகார் மனுவில் உண்மை இருக்கும் பட்சத்தில் பாலாஜி கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.