மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், மூவிபப் நிறுவனமும் இணைந்து குறும்பட போட்டி ஒன்றை நடத்தியது. இதில் 250 படங்கள் கலந்து கொண்டன. அதிலிருந்து 17 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிசுற்றுக்கு 5 படங்கள் தேர்வானது. இந்த 5 படங்களும் பொதுமக்கள் பார்வைக்காக 170 தியேட்டர்களில் 23 ஆயிரத்து 800 காட்சிகளாக திரையிடப்பட்டது. நேற்று இதற்கான பரிசளிப்பு விழா நடந்தது. வெற்றிபெற்ற குறும்பட இயக்குனர்களுக்கு பரிசு வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் சூர்யா பேசியதாவது: குறும்பட இயக்குனர்கள் ஆச்சர்யப்பட வைக்கிறார்கள். இங்கு வெற்றி பெற்றவர்களுக்கு 2டி நிறுவனத்தில் நல்ல வாய்ப்புகள் வழங்கப்படும். அவர்கள் ஒரு படம், ஒரு விருது என்று நின்று விடமாமல் தொடர்ந்து படங்கள் எடுக்க வேண்டும். குறும்படம் என்றாலும் அவர்களும் இயக்குனர்கள் தான். குறும்படங்கள் மூலம் பெரும் படங்களுக்கு அவர்கள் தயாராக வேண்டும். நான் என்றைக்கும் தொழில்நுட்ப கலைஞர்களை மதிப்பவன். அவர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. நான் கேட்டுக் கொள்வதெல்லாம் அறிவுபூர்வமான படங்களை விட உணர்வுபூர்வமான படங்களை தாருங்கள் என்றுதான். இவ்வாறு சூர்யா பேசினார்.
விழாவில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குனர்கள் வெற்றிமாறன், கே.வி.ஆனந்த், ஜெயேந்திரா, தயாரிப்பாளர் 2டி ராஜசேகர், தனஞ்செயன், மூவிபப் அரவிந்த் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.