டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தியத் திரையுலகில் இதுவரை வெளிவந்திராத பிரம்மாண்டமான படம் என்ற பெயரைப் பெற்ற 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் 1500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி நான்காவது வாரத்திலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வசூல் 2000 கோடியைத் தாண்டுமா என திரையுலகத்தினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆமீர்கானின் 'தங்கல்' படத்தின் வசூல் 'பாகுபலி 2' வசூலை முறியடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
சீனாவில் வெளியாகி இரண்டு வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'தங்கல்' படத்திற்கு அங்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று வரை சுமார் 745 கோடி வவரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் 'தங்கல்' படத்தின் உலக வசூல் 1500 கோடியைத் தாண்டியுள்ளது.
'பாகுபலி 2' படத்தின் வசூலை முறியடிக்க இனி வேறு ஒரு புதிய படமாவது வருமா என்று பலரும் சந்தேகம் எழுப்பிய நிலையில் இதற்கு முன் வெளிவந்த 'தங்கல்' படமே அந்த சாதனையை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.