'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மோகன்லால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'வில்லன்'. பி.உன்னிகிருஷ்ணன் இயக்கிவரும் இந்தப்படத்தில் விஷால், ஹன்ஷிகா, மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் மிக முக்கியமான காட்சி ஒன்றை படமாக்கும்போது மோகன்லால் சொன்ன ஒரு திருத்தத்தை கேட்டு இயக்குனர் உன்னி கிருஷ்ணன் உடனே ஒகே சொன்னாராம்.
அதாவது மோகன்லாலும், நடிகர் சித்திக்கும் இணைந்து நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது சித்திக் நீளமாக வசனம் பேச, பேசி முடிந்தபின் மோகன்லால் அவரை நோக்கி ஒரு லுக் விட வேண்டும் என இயக்குனர் கூறியுள்ளார். ஆனால் மோகன்லாலோ அந்த இடத்தில் சித்திக்கை நோக்கி பார்ப்பதற்கு பதிலாக, பார்வையை தரையை நோக்கி பார்ப்பதாக வைத்தால் அந்த காட்சிக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று சொல்ல, எந்த மறுபேச்சும் பேசாமல் மோகன்லால் சொன்னபடியே அந்த காட்சியை படமாக்கி விட்டார் உன்னிகிருஷ்ணன்.
பின்னர் படத்தின் எடிட்டர் சமீர் முகமது படத்தொகுப்பு பணிகளை செய்து வரும்போது, மேற்குறிப்பிட்ட காட்சியை எடிட் பண்ணும்போது மோகன்லாலின் அந்த லுக்கை கண்டு அசந்துவிட்டாராம். அதன்பின் அங்கே வந்த இயக்குனரிடம் அந்தக்காட்சியை சுட்டிக்காட்டி, மோகன்லாலின் அந்த லுக் தான் அந்த காட்சியின் ஹைலைட் என்றும் அவர் சித்திக்கை பார்க்கும் விதமாக அந்த லுக்கை படமாக்கியிருந்தால் அவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது என்றும் தனக்கு தோன்றியதை கூறியிருக்கிறார். ஷூட்டிங்ஸ்பாட்டில் நடந்த விஷயம் எடிட்டருக்கு தெரியாது. ஆனால் மோகன்லால் நன்றாக வரும் என கணித்த காட்சி, அது பற்றி எதுவும் அறிந்திராத எடிட்டரையே பேசவைத்து விட்டதே என ஆச்சர்யப்பட்டு போனாராம் இயக்குனர் உன்னிகிருஷ்ணன்.