பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
தோனி படத்திற்கு பிறகு தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களையே தேர்வு செய்து நடித்து வரும் சுஷாந்த் சிங் ராஜ்புட், அடுத்தப்படியாக ஒரு படத்தில் சம்பல் பள்ளத்தாக்கு வழிப்பறி கொள்ளையனாக நடிக்க உள்ளார். இயக்குநர் அபிஷேக் சவுபே, ஒரு படத்தை இயக்க உள்ளார். இது கொள்ளையர்கள் சம்பந்தப்பட்ட கதை. இதை ரோனி ஸ்ரூவாலா தயாரிக்க உள்ளார்.
இதுப்பற்றி இயக்குநர் அபிஷேக் கூறியிருப்பதாவது... "படத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டேன். தோனி படத்தில் சுஷாந்த் சிங்கின் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து நான் தயார் செய்த கதையை அவரிடம் காண்பித்தேன். அவரும் படித்து பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னார். எல்லாம் சரியாக சென்றால் வருகிற டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பை ஆரம்பிக்க எண்ணியுள்ளோம், இது ஒரு ஆக்ஷ்ன் படம், நிச்சயம் இந்த ரோலுக்கு சுஷாந்த் சிங் சரியாக இருப்பார்" என்றார்.
சுஷாந்த் சிங் ராஜ்புட், தற்போது ராப்தா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஜூன் 7-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.