கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
மிர்ஷியா படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குநர் ஓம்பிரகாஷ் மெகரா இயக்க இருக்கும் படம் மேரி பியாரி பிரைம் மினிஸ்டர். குடிசைப்பகுதியில் வாழும் நான்கு சிறுவர்களை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. நான் குழந்தைகளின் நட்பு, சோகம், ஏக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இப்படம் பேச இருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தார் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ்.
இதுகுறித்து இயக்குநர் ராகேஷ் கூறியதாவது... "எனது முந்தைய படம் முழுக்க முழுக்க வடக்கில் படமாக்கப்பட்டது. கடந்த 1988-ம் ஆண்டு முதல் நான், மும்பையில் வசித்து வருகிறேன். அப்போது இருந்த மும்பை இப்போது இல்லை. உலகளவுக்கு பேசப்படும் முக்கிய நகராக மும்பை மாறியுள்ளது. பல்வேறு அடுக்குமாடி கட்டடங்கள் உருவாகி விட்டன. ஆனாலும் இன்னும் மும்பையில் சேரி பகுதிகள் பல இருக்க தான் செய்கின்றன. இதைப்பற்றி படம் இயக்க வேண்டும் என்று நீண்டகாலமாகவே என் மனதில் ஒரு எண்ணம் இருந்தது. அதன்படி தற்போது இந்தப்படத்தை உருவாக்கி வருகிறேன்" என்றார்.