'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாகுபலி-2 படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ், தெலுங்கு சினிமாக்களில் சரித்திர படங்கள் அதிகமாக உருவாகத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், தற்போது பாகுமதி, சங்கமித்ரா படங்கள் உருவாகி வரும் நிலையில், அடுத்து மகாபாரதம், ராமாயணம் என பல பிரமாண்ட சரித்திர படங்கள் 1000 கோடி, 500 கோடி பட்ஜெட்டுகளில் தயாராகின்றன.
இந்த நிலையில், பேய் கதைகளாக நடித்து வந்த காஞ்சனா புகழ் ராகவா லாரன்சும் தற்போது ஒரு சரித்திர படத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்கான கதையையும் ராஜமவுலியின் தந்தையும் பாகுபலி கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். 18-19ஆம் நூற்றாண்டுகளில் நடக்கும் கதையில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது.
மேலும், இந்த படத்தில் நடிக்க லாரன்ஸ் வட்டார நடிகைகள் சிலர் முயற்சி எடுத்து வந்த நிலையில், இதற்கு முன்பு தன்னுடன் நடித்த அத்தனை நடி கைகளையும் ஓரங்கட்டி விட்டு இந்த படத்தின் நாயகியாக காஜல்அகர்வாலை ஓகே செய்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் லாரன்ஸ். இந்த படத்தில் காஜல்அகர்வாலுக்கு இளவரசி வேடம் என்றும் கூறப்படுகிறது.