கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
குளோபல் இன்போடெயின்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இதில் சிம்பு ஜோடியாக தமன்னா, ஸ்ரேயா, சனாகான் நடித்துள்ளார்கள். இந்த படத்தை எந்தவித திட்டமிடுதலும் இல்லாமல் எடுத்து தள்ளியதில் இரண்டு படத்துக்கான புட்டேஜ் வந்து விட்டது. இதனால் படத்தை இரண்டு பாகமாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தை இரண்டு பாகத்துக்கு நீளமாக்க வேண்டும் என்பதால் அதில் சில புதிய விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள். இதுபற்றி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியதாவது:
படத்தை தொடங்கும்போது இரண்டுபாகமாக வெளியிடும் ஐடியா எதுவுமில்லை. ஆனால் கதையும், திரைக்தையும் மிகவும் பிடித்து விட்டால் எழுதிய காட்சி அனைத்தையும் எடுத்து விடுங்கள் என்று சிம்பு கூறினார். எடுத்து விட்டு பார்த்தால் எந்த காட்சியையும் வெட்ட முடியவில்லை. இதனால் இரண்டு பாகமாக வெளியிட முடிவு செய்தோம். இரண்டு படத்துக்குரிய வலு கதையில் இருந்தது. இருந்தாலும் கூடுதலாக சில அம்சங்களை சேர்த்துள்ளோம். முதல் பாகத்தில் கஸ்தூரி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இரண்டாம் பாகத்தில் 4வதாக ஒரு ஹீரோயின் நடிக்க இருக்கிறார். அவர் யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. முதல் பாகத்தை எடுக்கும்போதே இரண்டாம் பாகத்துக்கனா 60 சதவிகித படப்பிடிப்பையும் முடித்து விட்டோம். முதல் பாகத்தின் முடிவில் இரண்டாம் பாகத்தை பார்க்க தூண்டும் வகையில் ஒரு திருப்பமும் இருக்கிறது. என்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.