ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னை: வரும் 30-ம் தேதி அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார்.
இணைய தளத்தில் படங்கள் வெளியாவதை தடுக்க வலியுறுத்தி வருகிற மே 30ந் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்திருந்தார். ஆனால் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதலில் வேலை நிறுத்ததிற்கு ஒத்துக் கொண்ட தியேட்டர் அதிபர்கள் சங்கம் பிறகு பின் வாங்கிவிட்டது. பெப்சியும் வேலை நிறுத்ததில் கலந்து கொள்ளப்போவதாக அறிவிக்கவில்லை. பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து அதை வெளியிட தயாராக இருக்கும் நிறுவனங்களும் வேலை நிறுத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்தும் போராட்டத்திற்கு ஆதரவு கிடைக்ககாத நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையில் இன்று (மே 21-ல் ) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டதில் வரும் 30-ம் தேதி நடைபெறுவதாக அறிவித்திருந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் விஷால் கூறியதாவது: ஆன்லைன் புக்கிங்கில் ரூ.30 அதிகம் வசூலிக்கப்படுகிறது. அதை முடிந்த அளவு குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விஷால் கூறினார்.