தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆர்யா, அனுஷ்கா நடிப்பில், செல்வராகவன் இயக்கிய 'இரண்டாம் உலகம்' 2013, நவம்பர் மாதம் வெளியானது. படு தோல்வியடைந்த இரண்டாம் உலகம் படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை.
ஏறக்குறைய மூன்றரை வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் என்பதால் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கிறது. அதோடு, செல்வராகவனும், எஸ்.ஜே.சூர்யாவும் முதன் முதலாக இணைந்திருக்கும் படம் என்பதாலும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்கு கூடுதல் கவனஈர்ப்பு கிடைத்திருக்கிறது.
எஸ்.ஜே.சூர்யாவுடன் ரெஜினா கெசன்டரா, நந்திதா ஸ்வேதா கதாநாயகிகளாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். கடந்த மாதமே இப்படம் வெளியாகவிருந்தது. அதனடிப்படையில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. சென்சாரில் 'யூ/ஏ' சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டது.
நெஞ்சம் மறப்பதில்லை படத்தை விரைவில், அதாவது ஜூன் 2-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த படத்தை 'எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.