பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகி 4 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் வெற்றியைச் சுவைக்காமல் இருப்பவர் கௌதம் கார்த்திக். அதிலும் அவருடைய அறிமுகம் இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படும் மணிரத்னம் இயக்கிய 'கடல்' படம் மூலம் நடந்தது. அறிமுகப் படமே கௌதமுக்கு பெரிய தோல்வியாக அமைந்தது. அடுத்து அவர் தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற 'அலா மொதலைந்தி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'என்னமோ ஏதோ' படத்தில் நடித்தார். அந்தப் படமும் தோல்வியடைந்தது. அடுத்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் 'வை ராஜா வை' படத்தில் நடித்தார். இந்தப் படம் முந்தைய படங்களைக் காட்டிலும் கொஞ்சமாவது ஓடியது. ஆனால், வெற்றிக் கோட்டைத் தாண்டவில்லை.
2016ம் ஆண்டில் கௌதம் நடித்த எந்தப் படமும் வெளிவரவில்லை. இந்த ஆண்டில் வெளிவந்த 'முத்துராமலிங்கம்' படமும் ஓடிய சில நாட்களிலேயே சட்டச் சிக்கல்களால் படத்தின் திரையீடு நிறுத்தப்பட்டது. இருந்தாலும் கௌதம் கார்த்திக் கைவசம் தற்போது 5 படங்கள் உள்ளன. அவற்றில் முதலாவதாக ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவருடைய உதவியாளர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள 'ரங்கூன்' படம் வெளிவர உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. டிரைலரைப் பார்த்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். தமிழ்த் திரையுலகில் இதுவரை வெற்றியை அனுபவிக்காத கௌதம் கார்த்திக்குக்கு இந்தப் படம் முதல் வெற்றிப் படமாக அமையும் என வாழ்த்தி வருகிறார்கள். டிரைலரும் ரசிகர்களைக் கவரும் விதத்தில் இருக்கிறது. பர்மா அகதிகள் பற்றிய கதையாக வெளிவர உள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியான 3 நாட்களில் 10 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
டிரைலருக்கு ரசிகர்கள் தந்த வரவேற்பிற்கு தயாரிப்பாளர் முருகதாஸ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி நன்றி தெரிவித்துள்ளார்கள். இப்படி ஒரு படத்தில் தன்னை நடிக்க வைத்ததற்கு கௌதம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.