டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு அந்த படத்தில் நடித்த பிரபாஸ்-ராணா இருவருமே பல மொழி ரசிகர்களுக்கும் பரிட்சயமான நடிகர்களாகி விட்டனர். அதோடு, அவர்கள் நடிக்கும் புதிய படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிப்படங்களாக உருவாகி வருகின்றன. அதேபோல், அப்பட நாயகியான அனுஷ்கா தற்போது பாகுமதி படத்தில் நடித்து வருகிறார். சரித்திர கதையில் தயாராகியுள்ள இந்த படம் அனுஷ்காவிக்கு இன்னொரு அருந்ததியாக இருக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில், பாகுபலி-2 படம் வெளியான நேரத்தில் பிரபாஸ்-அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக செய்திகள் பரவின. ஆனால் பின்னர் அப்படியொரு செய்தியை பரப்பிவிட்ட தனது உதவியாளரை வேலையை விட்டே நீக்கினார் அனுஷ்கா. அதேசமயம் அந்த செய்திக்கு அவர் நேரடியாக மீடியாக்களுக்கு எந்த மறுப்பு செய்தியும் கொடுக்கவில்லை.
இதற்கிடையே அனுஷ்கா அளித்துள்ள ஒரு பேட்டியில், பாகுபலி நடிகர்களான பிரபாஸ்-ராணா இருவரில் உங்களை கவர்ந்த ஆணழகன் நடிகர் யார்? என்று கேட்கப்பட்டபோது, பிரபாஸ் என்று பதிலளித்துள்ளார். ராணா பற்றி கூறுகையில், ராணா எனது அண்ணன் போன்றவர். சினிமாவில் நடிக்கும்போது தவிர மற்ற நேரங்களில் என்னை தங்கை என்றுதான் அன்போடு அழைப்பார் என்று கூறியுள்ளார் அனுஷ்கா.