பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
இந்தியாவில் திரைப்படம் என்பது உருவானதிலிருந்து மொழிவாரியாகவே படங்கள் வெளிவந்தன. ஹிந்தி, தமிழ், தெலுங்கு என ஆரம்பித்து படிப்படியாக மற்ற மொழிப் படங்களும் வர ஆரம்பித்தன. கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி போன்ற மொழிகளில் அதிகமான படங்கள் ஒவ்வொரு ஆண்டும் வருகின்றன. இவற்றில் ஒரு மொழியில் தயாராகி மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்படும் படங்களும் ஆரம்ப காலம் முதலே இருக்கின்றன.
பொதுவாக தென்னிந்தியாவில் தான் அதிகமான படங்கள் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகின்றன. தென்னிந்திய மொழிப் படங்கள் ஹிந்தியிலோ அல்லது மற்ற வட மொழிகளிலோ அதிகம் டப் செய்யப்படுவதில்லை. ஆனால், தெலுங்கிலிருந்து ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்ட 'பாகுபலி 2' திரைப்படம் சினிமா உருவான காலம் முதல் இருந்து வந்த சாதனைகளை முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
ஹிந்தியில் டப்பிங் படமாக வெளியான 'பாகுபலி 2' படம் மூன்று வாரங்களுக்குள் சுமார் 455 கோடியை வசூலித்துள்ளது. அது 500 கோடியைத் தாண்டுவதற்கு இன்னும் 45 கோடிகளே தேவை. 4 வாரங்கள் முடிவதற்குள்ளாக அந்த 44 கோடியையும் வசூலித்து 500 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிந்தியில் முதல் வாரத்தில் 246 கோடி, இரண்டாவது வாரத்தில் 142 கோடி, மூன்றாவது வாரத்தில் 67 கோடி என 455 கோடிகளை வசூலித்துள்ளது. ஏற்கெனவே 400 கோடி கிளப்பைக் கடந்துள்ள 'பாகுபலி 2' படம் இன்னும் 45 கோடி வசூலித்தால் 500 கோடி கிளப்பில் சேர்ந்துவிடும். அதன்பின், இந்தியாவில் முதல் முறையாக 500 கோடி கிளப்பில் சேர்ந்த முதல் படம், அதுவும் ஒரு டப்பிங் படம் என்ற சாதனையை 'பாகுபலி 2' படைக்கும்.