'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
கடந்த வருடம் பிருத்விராஜை வைத்து 'ஊழம்' என்கிற படத்தை இயக்கினார் ஜீத்து ஜோசப். ஆனால் அந்தப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. அதற்கு முந்தைய அவரது கனவு படமான 'லைப் ஆப் ஜோஸுட்டி' படமும் பிளாப் லிஸ்ட்டில் தான் இடம்பிடித்தது. இந்தநிலையில் தனது அடுத்த படம் மீண்டும் 'த்ரிஷ்யம்' போல ஒரு பரபரப்பை உண்டு பண்ண வேண்டும் என தற்போது தீவிர கதை உருவாக்கத்தில் இருக்கிறார் ஜீத்து ஜோசப்.. ஏற்கனவே அறிவித்தபடி மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் தான் இந்தப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இந்தநிலையில் ஜீத்து ஜோசப் தனது புதிய படத்திற்கு நிறைய புதுமுகங்களை தேர்ந்தெடுக்கிறார் என்றும் இதற்கான ஆளெடுப்பு வேலை நடக்கிறது என்று சமீபத்தில் சோஷியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியானது.. இந்த தகவல் ஜீத்து ஜோசப்ப்பின் கவனத்துக்கும் சென்றது. தான் எந்தவிதமான ஆள் தேர்வும் செய்யவில்லை என்றும் சிலர் அப்படி சொல்லி பணம் பறிப்பதாக தனது கவனத்துக்கும் வந்ததாகவும், இதை உண்மை என நம்பி யாரும் ஏமாறவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜீத்து ஜோசப்.