'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினி கிட்டத்தட்ட அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்ட மாதிரித்தான் ரசிகர்களுடனான ஐந்தாம் நாள் சந்திப்பில் அவர் பேசிய பேச்சு அமைந்திருந்தது.. இந்த கருத்து அரசியல் தலைவர்கள் ஒருபக்கம் வரவேற்பு, எதிர்ப்பு என இருவிதமான விமர்சனங்களை முன் வைத்து தங்கள் கருத்துக்களை கூறிவருகிறார்கள். இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் திரையுலகில் இருக்கும் ஒரு நடிகை ரஜினியின் இந்த பேச்சை கிண்டலடித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். வேறு யாருமல்ல நடிகை கஸ்தூரி தான் அவர்.
இவருக்கு ரஜினியின் மீது என்ன கோபமோ தெரியவில்லை, “நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாரா சூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவரால் அதெப்படி சாத்தியமாகும்” என தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். கூடவே போர் போர் அப்பிடின்னு கேட்டு போர் அடிக்குது, அக்கப்போர் என்று கூறியுள்ளார்.