ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினி கிட்டத்தட்ட அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்ட மாதிரித்தான் ரசிகர்களுடனான ஐந்தாம் நாள் சந்திப்பில் அவர் பேசிய பேச்சு அமைந்திருந்தது.. இந்த கருத்து அரசியல் தலைவர்கள் ஒருபக்கம் வரவேற்பு, எதிர்ப்பு என இருவிதமான விமர்சனங்களை முன் வைத்து தங்கள் கருத்துக்களை கூறிவருகிறார்கள். இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் திரையுலகில் இருக்கும் ஒரு நடிகை ரஜினியின் இந்த பேச்சை கிண்டலடித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். வேறு யாருமல்ல நடிகை கஸ்தூரி தான் அவர்.
இவருக்கு ரஜினியின் மீது என்ன கோபமோ தெரியவில்லை, “நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாரா சூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவரால் அதெப்படி சாத்தியமாகும்” என தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். கூடவே போர் போர் அப்பிடின்னு கேட்டு போர் அடிக்குது, அக்கப்போர் என்று கூறியுள்ளார்.