டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜனதா கேரேஜ் படத்தைத் தொடர்ந்து விஜய் 61, அநீதி கதைகள், இரும்புத்திரை, சாவித்ரி மற்றும் தெலுங்கில் 2 படங்கள் என ரொம்ப பிசியாகவே இருக்கிறார் சமந்தா. அதோடு, சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் படத்திற்காக சிலம்பக் கலை பயிற்சியும் எடுத்து வருகிறார். தனது வருங்கால கணவரான நாக சைதன்யாவும் தான் நடிப்பதற்கு எந்த தடையும் விதிக்காததால் தொடர்ந்து நடிப்பில் அதிகப்படியான ஈடுபாடுகாட்டி வருகிறார் சமந்தா.
அதுமட்டுமின்றி, அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு மட்டுமே தற்போது ஓகே சொல்லி வரும் சமந்தா, ஒரு கேரக்டருக்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்கவும் தான் தயாராக இருப்பதாக டைரக்டர்களிடம் கூறி வருகிறார். இதற்கு முன்பு நான் சில படங்களில் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். அதற்கு நல்லவிதமான விமர்சனங்களும் கிடைத்துள்ளது. எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்திருக்கிறது என்றாலும் நான் கவலைப்படவில்லை. என் வேலையை சரியாக செய்ததாகவே கருதுகிறேன்.
மேலும், சில கதாபாத்திரங்கள் நமக்கு மனதளவில் திருப்தி கொடுக்கிறபோது பெரிய மனநிறைவு கிடைக்கும். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் அந்த திருப்திக்கு ஈடாகாது. அதனால், இப்போது பணம் என்பதை கடந்து ஒரு நடிகையாய் என்னை திருப்திப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களாக தேடுகிறேன் என்கிறார் சமந்தா.