மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
முன்பெல்லாம் ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தாலே பிரச்னைதான். கதை கேட்கும்போதே இரண்டு நாயகிகள் என்று டைரக்டர் சொன்னதும் தங்களது கதாபாத்திரத்தை விட இன்னொரு நடிகையின் கேரக்டர் பற்றி அறிவதில் நடிகைகள் அதிக ஆர்வமாக இருந்தனர். அதையடுத்து படப்பிடிப்பு தளத்துக்கு வந்த பிறகு இரண்டு நடிகைகளும் தோழிகளாக பழகாமல், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் எதிரிகளைப்போன்றே எதிரும் புதிருமாக இருந்தனர். ஆனால் அந்த நிலை இப்போது மாறி விட்டது. எப்படி நடிகர்கள் ஒருவரது நடிப்பை ஒருவர் பாராட்டி நட்பு வளர்க்கிறார்களோ அதேபோல், நடிகைகளும் மாறி வருகின்றனர்.
அந்த வகையில், செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடித்து வரும் வணங்காமுடி படத்தில் தற்போது சிம்ரன், ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி என பல நடிகைகள் இணைந்து நடிக்கிறார்கள். இந்த கதையில் யாரும் ஹீரோயின் என்று சொல்ல முடியாத அளவுக்கு அனைவருமே கேரக்டர் நடிகைகளாகத்தான் நடித்து வருகிறார்கள். இதில் சாந்தினி நிருபராக நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிப்பது பற்றி அவர் கூறுகையில், வணங்காமுடியில் நான் ஒரு ரிஸ்க்கான நிருபர் வேடத்தில் நடிக்கிறேன். நான் இதுவரை நடித்த வேடங்களில் இது பேசக்கூடியதாக இருக்கும். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புக்கு முதல்நாள் செல்லும் போது பல நடிகைகள் இருப்பதால் எப்படி பழகப்போகிறார்களோ என்று பயந்தபடியே சென்றேன். ஆனால், சிம்ரன் மேடம், ரித்திகாசிங் உள்பட அனைவருமே அன்பாக பழகினார்கள். இப்போது நாங்கள் ஒரு குடும்பம் போன்று மாறி விட்டோம். ஒவ்வொருத்தரின் கதாபாத்திரம் பற்றியும், அதில் எப்படி நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பது மாற்றியும் நாங்கள் மாறி மாறி கலந்து பேசிக்கொள்கிறோம். முக்கியமாக, ஒருவர் சிறப்பாக நடித்தால் அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்துகிறார்கள் என்கிறார் சாந்தினி.