போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகிவிட்டது என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வெற்றிடத்தை எப்படியாவது நிரப்பி விட வேண்டும் என பலரும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அரசியல் பற்றியோ அதிமுக அரசு பற்றியோ எந்த ஒரு சினிமா நடிகரும் வாயைத் திறந்து விமர்சித்ததே இல்லை.
கமல்ஹாசன் படம், விஜய் படம் ஆகியவை வெளியீட்டுப் பிரச்சனையில் சிக்கித் தவித்த போது கூட பார்த்து, பார்த்துத்தான் சிலர் கருத்துக்களை வெளியிட்டார்கள். ஆளும் அரசை எதிர்த்துக் கொண்டால் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்ற பயம்தான் அதிகம் இருந்தது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் காட்சிகள் மாறின. சினிமா நடிகர்கள் பலரும் அரசியல் பேச ஆரம்பித்தார்கள். குறிப்பாக கமல்ஹாசன், ஜல்லிக்கட்டுப் போராட்டம் அவருக்கு சரியான களத்தை அமைத்துக் கொடுத்தது. தொடர்ந்து அரசியல் ரீதியான கருத்துக்களைப் பகிர்ந்து வந்த கமல்ஹாசனுக்கு மீண்டும் பணம் சம்பாதிக்கும் ஆசை வந்தது. பணம் வேண்டும் என்பதற்காக டிவி வரை சென்றுவிட்டார். அதை சொன்னது அவரே தான் என்பதை கவனித்தில் கொள்க.
ரசிகர்களைச் சந்திக்கப் போகிறேன், புகைப்படம் எடுக்கப் போகிறேன் என்று சொல்லி கடந்த 5 நாட்களாக ரசிகர்களைச் சந்தித்தார் தமிழ்த் திரையுலகத்தில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த். ஆரம்ப நாளிலும், கடைசி நாளிலும் அவர் பேசிய பேச்சுக்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் விவாதப் பொருளாகின.
யார் யாரோ, அவருடைய பேச்சை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சினிமா உலகத்தைச் சார்ந்த அநேகநபர்கள் இதுவரை ரஜினி பேச்சு பற்றி எதுவும் சொல்லவில்லை.
காமெடி நடிகரான பிரேம்ஜி மட்டுமே ரஜினியின் பேச்சை டிவிட்டரில் பகிர்ந்து 'தலைவா' என்று கமெண்ட் செய்திருக்கிறார். வேறு எந்த நடிகரும் ஆதரவு தெரிவித்தாகத் தெரியவில்லை. என்ன காரணமோ...?.