தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகிவிட்டது என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வெற்றிடத்தை எப்படியாவது நிரப்பி விட வேண்டும் என பலரும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அரசியல் பற்றியோ அதிமுக அரசு பற்றியோ எந்த ஒரு சினிமா நடிகரும் வாயைத் திறந்து விமர்சித்ததே இல்லை.
கமல்ஹாசன் படம், விஜய் படம் ஆகியவை வெளியீட்டுப் பிரச்சனையில் சிக்கித் தவித்த போது கூட பார்த்து, பார்த்துத்தான் சிலர் கருத்துக்களை வெளியிட்டார்கள். ஆளும் அரசை எதிர்த்துக் கொண்டால் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்ற பயம்தான் அதிகம் இருந்தது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் காட்சிகள் மாறின. சினிமா நடிகர்கள் பலரும் அரசியல் பேச ஆரம்பித்தார்கள். குறிப்பாக கமல்ஹாசன், ஜல்லிக்கட்டுப் போராட்டம் அவருக்கு சரியான களத்தை அமைத்துக் கொடுத்தது. தொடர்ந்து அரசியல் ரீதியான கருத்துக்களைப் பகிர்ந்து வந்த கமல்ஹாசனுக்கு மீண்டும் பணம் சம்பாதிக்கும் ஆசை வந்தது. பணம் வேண்டும் என்பதற்காக டிவி வரை சென்றுவிட்டார். அதை சொன்னது அவரே தான் என்பதை கவனித்தில் கொள்க.
ரசிகர்களைச் சந்திக்கப் போகிறேன், புகைப்படம் எடுக்கப் போகிறேன் என்று சொல்லி கடந்த 5 நாட்களாக ரசிகர்களைச் சந்தித்தார் தமிழ்த் திரையுலகத்தில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த். ஆரம்ப நாளிலும், கடைசி நாளிலும் அவர் பேசிய பேச்சுக்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் விவாதப் பொருளாகின.
யார் யாரோ, அவருடைய பேச்சை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சினிமா உலகத்தைச் சார்ந்த அநேகநபர்கள் இதுவரை ரஜினி பேச்சு பற்றி எதுவும் சொல்லவில்லை.
காமெடி நடிகரான பிரேம்ஜி மட்டுமே ரஜினியின் பேச்சை டிவிட்டரில் பகிர்ந்து 'தலைவா' என்று கமெண்ட் செய்திருக்கிறார். வேறு எந்த நடிகரும் ஆதரவு தெரிவித்தாகத் தெரியவில்லை. என்ன காரணமோ...?.