டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகிவிட்டது என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வெற்றிடத்தை எப்படியாவது நிரப்பி விட வேண்டும் என பலரும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அரசியல் பற்றியோ அதிமுக அரசு பற்றியோ எந்த ஒரு சினிமா நடிகரும் வாயைத் திறந்து விமர்சித்ததே இல்லை.
கமல்ஹாசன் படம், விஜய் படம் ஆகியவை வெளியீட்டுப் பிரச்சனையில் சிக்கித் தவித்த போது கூட பார்த்து, பார்த்துத்தான் சிலர் கருத்துக்களை வெளியிட்டார்கள். ஆளும் அரசை எதிர்த்துக் கொண்டால் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்ற பயம்தான் அதிகம் இருந்தது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் காட்சிகள் மாறின. சினிமா நடிகர்கள் பலரும் அரசியல் பேச ஆரம்பித்தார்கள். குறிப்பாக கமல்ஹாசன், ஜல்லிக்கட்டுப் போராட்டம் அவருக்கு சரியான களத்தை அமைத்துக் கொடுத்தது. தொடர்ந்து அரசியல் ரீதியான கருத்துக்களைப் பகிர்ந்து வந்த கமல்ஹாசனுக்கு மீண்டும் பணம் சம்பாதிக்கும் ஆசை வந்தது. பணம் வேண்டும் என்பதற்காக டிவி வரை சென்றுவிட்டார். அதை சொன்னது அவரே தான் என்பதை கவனித்தில் கொள்க.
ரசிகர்களைச் சந்திக்கப் போகிறேன், புகைப்படம் எடுக்கப் போகிறேன் என்று சொல்லி கடந்த 5 நாட்களாக ரசிகர்களைச் சந்தித்தார் தமிழ்த் திரையுலகத்தில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த். ஆரம்ப நாளிலும், கடைசி நாளிலும் அவர் பேசிய பேச்சுக்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் விவாதப் பொருளாகின.
யார் யாரோ, அவருடைய பேச்சை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சினிமா உலகத்தைச் சார்ந்த அநேகநபர்கள் இதுவரை ரஜினி பேச்சு பற்றி எதுவும் சொல்லவில்லை.
காமெடி நடிகரான பிரேம்ஜி மட்டுமே ரஜினியின் பேச்சை டிவிட்டரில் பகிர்ந்து 'தலைவா' என்று கமெண்ட் செய்திருக்கிறார். வேறு எந்த நடிகரும் ஆதரவு தெரிவித்தாகத் தெரியவில்லை. என்ன காரணமோ...?.