ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபாஸ் நடித்துள்ள பாகுபலி படம் தற்போது உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி ரூ.1500 கோடி வசூலை எட்டியுள்ளது. இதன் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பாகுபலி நாயகன் பிரபாஸ் ஹாலிவுட் நடிகர் போன்று உலகம் முழுவதும் அறியப்பட்ட நடிகராகிவிட்டார். அவரது அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்த நிலையில் பிரபாஸ் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்தப் படம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது.
இந்தப் படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோ தயாரிக்கிறார்கள். சங்கர், இசான், லாய் இசை அமைக்கிறார்கள். மதி ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. பிரபலாமான பாலிவுட் நிறுவனம் சாஹோவின் அனைத்து உரிமத்தையும் 350 கோடி ரூபாய்க்கு கேட்டுள்ளது. இது தொடர்பான வியாபார பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.