'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுந்தர்.சி தயாரிப்பில் ராஜ்கபூர் இயக்கி வரும் தொடர் நந்தினி. இந்த தொடர் தற்போது 100 எபிசோட்களை கடந்திருக்கிறது. இதில் நந்தினியாக நடித்து வருகிறார் நித்யாராம். தமிழ் சீரியலில் நடிப்பதன் மூலம் தமிழ் என் தாய்மொழியாகி விட்டது என்கிறார் நித்யாராம். அவர் மேலும் கூறியதாவது:
முதலில் தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் நடிக்கும்போது தயக்கமாக இருந்தது. முதல்நாள் ஷூட்டிங்கில் கூட மிகவும் பயமாக இருந்தது. ஆனால் எந்த ஒரு பயமும் இல்லாமல் சகஜமான மனநிலை இப்போது வந்துவிட்டது. எனது தாய்மொழி கன்னடம். தற்போது தமிழ் எனக்கு நன்கு பழகிவிட்டது. தமிழ் என் தாய்மொழியாகிவிட்டது. தற்போது எனக்கு என்னுடைய தாய் மொழியை விட தமிழில் நடிப்பது எளிதாக உள்ளது .
இது சினிமாவில் நடிப்பது போன்ற உணர்வு தான் தருகிறது. மேலும் எனது உடை மற்றும் சிகை அலங்காரம் அனைத்தையும் குஷ்பு மேம் தான் தேர்வு செய்வார்கள். இங்கு வந்து நான் பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன். என்னிடம் பல நாடுகளில் இருந்து தொடர்பு கொண்டு நந்தினி தொடரை பற்றி ரசிகர்கள் பேசுகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தொடரில் நடிப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்கிறார் நித்யாராம்.