தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சுந்தர்.சி தயாரிப்பில் ராஜ்கபூர் இயக்கி வரும் தொடர் நந்தினி. இந்த தொடர் தற்போது 100 எபிசோட்களை கடந்திருக்கிறது. இதில் நந்தினியாக நடித்து வருகிறார் நித்யாராம். தமிழ் சீரியலில் நடிப்பதன் மூலம் தமிழ் என் தாய்மொழியாகி விட்டது என்கிறார் நித்யாராம். அவர் மேலும் கூறியதாவது:
முதலில் தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் நடிக்கும்போது தயக்கமாக இருந்தது. முதல்நாள் ஷூட்டிங்கில் கூட மிகவும் பயமாக இருந்தது. ஆனால் எந்த ஒரு பயமும் இல்லாமல் சகஜமான மனநிலை இப்போது வந்துவிட்டது. எனது தாய்மொழி கன்னடம். தற்போது தமிழ் எனக்கு நன்கு பழகிவிட்டது. தமிழ் என் தாய்மொழியாகிவிட்டது. தற்போது எனக்கு என்னுடைய தாய் மொழியை விட தமிழில் நடிப்பது எளிதாக உள்ளது .
இது சினிமாவில் நடிப்பது போன்ற உணர்வு தான் தருகிறது. மேலும் எனது உடை மற்றும் சிகை அலங்காரம் அனைத்தையும் குஷ்பு மேம் தான் தேர்வு செய்வார்கள். இங்கு வந்து நான் பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன். என்னிடம் பல நாடுகளில் இருந்து தொடர்பு கொண்டு நந்தினி தொடரை பற்றி ரசிகர்கள் பேசுகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தொடரில் நடிப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்கிறார் நித்யாராம்.