ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருட்டு விசிடி ஒழிப்பு, இணையதளத்தில் படங்கள் திருட்டுத்தனமாக வெளியீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மே 30ந் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்திருந்தார். ஆனால் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதலில் வேலை நிறுத்ததிற்கு ஒத்துக் கொண்ட தியேட்டர் அதிபர்கள் சங்கம் பிறகு பின் வாங்கிவிட்டது. பெப்சியும் வேலை நிறுத்ததில் கலந்து கொள்ளப்போவதாக அறிவிக்கவில்லை. பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து அதை வெளியிட தயாராக இருக்கும் நிறுவனங்களும் வேலை நிறுத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்டியாக தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைகூட்டம் நாளை மாலை 5 மணிக்கு சங்க வளாகத்தில் நடக்கிறது. இதில் வேலை நிறுத்தம், அதற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு, புதிய சங்கம் உருவாகியிருப்பது, ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலமுனை பிரச்சினைகளால் அனுதினமும் மிகப்பெரிய பொருள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின் அவசர ஆலோசனைக்கூட்டம் 21.05.17 அன்று மாலை சங்க வளாகத்தில் நடக்கிறது. இதில் தயாரிப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.