வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
பாலிவுட்டின் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஆலியா பட். சில தினங்களுக்கு முன்னர் இவர், அமிஷ் திரிபாதி எழுதியுள்ள சீதா - வாரியர் ஆப் மிதிலா புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய ஆலியா பட், தனக்கு சீதா வேடத்தில் நடிக்க ஆசை என்றார்.
இதுகுறித்து ஆலியா பட் மேலும் கூறியிருப்பதாவது... "இந்த புத்தகத்தை யாராவது படமாக இயக்கினால், அதில் நான் சீதா வேடத்தில் நடிக்க விரும்புகிறேன். சீதாவை பற்றி அறிந்திராத பல விஷயங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்திய புராணங்களில் ராமாயணம் முக்கியமானது. அப்படிப்பட்ட ராமாயணத்தை மக்கள் திரையில் கண்டால் நிச்சயம் ரசிப்பார்கள். சீதா ஒரு நல்ல அரசியாகவும், பாதுகாவலராகவும் இருந்தார்" என்றார்.
ஆலியா பட் அடுத்தப்படியாக ரன்பீர் கபூர் நடிக்க உள்ள டிராகன் படத்தில் நடிக்க இருக்கிறார்.