ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வட இந்திய சேனல்களில் பிரபலமான நிகழ்ச்சி கோன் பனேகா குரோர்பதி. இந்த நிகழ்ச்சியை பாலிவுட்டின் பிக் பி-ஆன அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கினார். இதே நிகழ்ச்சி பிராந்திய மொழிகளில் அந்தந்த மொழி ஸ்டார்கள் நடத்தினார்கள். இருந்தாலும் அமிதாப் நடத்திய அளவுக்கு பெரிய அளவில் ரீச்சாகவில்லை. தற்போது குரோர்பதி சீசன்-9 நிகழ்ச்சி உருவாக இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை அமிதாப்பிற்கு பதிலாக அவரது மருமகளான ஐஸ்வர்யா ராய் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஐஸ்வர்யா ராயிடம் பேசி வருகின்றனர். ஆனால் இன்னும் உறுதியாகவில்லை. ஒருவேளை ஐஸ்வர்யா ராய் மறுப்பு சொல்லிவிட்டால் அவருக்கு பதிலாக மாதுரி தீட்சித்தை வைத்து நிகழ்ச்சி பண்ண இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அநேக ரசிகர்கள், அமிதாப்பையே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சொல்லி கூறி வருகிறார்களாம். ஆனால் தயாரிப்பு தரப்போ புதியவர்களை கொண்டு வரும் எண்ணத்தில் இருக்கிறதாம். குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கபோவது அமிதாப்பா, ஐஸ்வர்யாவா அல்லது மாதுரியா...? யார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.