600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி வருகிறார் நடிகை கங்கனா ரணாவத். சிம்ரன் பட கதையை தனதாக்கி சொந்தம் கொண்டாடுகிறார் என்று கதாசிரியர் அபூர்வா அஸ்ராணி குற்றம் சாட்டி வரும் வேளையில், அடுத்தப்படியாக பிரபல இயக்குநர் கேத்தன் மேத்தா, கங்கனா மீது கதை திருட்டு புகார் கூறியுள்ளார்.
கங்கனாவும், கேத்தன் மேத்தா இணைந்து ராணி லக்ஷ்மி பாய் படத்தில் பணியாற்ற இருந்தனர். ஆனால் சில காரணங்களால் இந்தப்படத்திலிருந்து விலகிவிட்டார் கங்கனா. இந்நிலையில் கங்கனா, தற்போது கிரிஷ் இயக்கத்தில் மணிகர்னிகா என்ற படத்தில் ராணி லட்சுமி பாய் ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்புகள் வாரணாசியில் துவங்கியது. இந்தச்சூழலில் கங்கனாவிற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் இயக்குநர் கேத்தன் மேத்தா.
இதுகுறித்து கேத்தன் மேத்தா கூறியிருப்பதாவது... "உண்மை தான், கங்கனாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். எனது படத்தையே மொத்தமாக கடத்தி கொண்டு போய்விட்டார். ராணி லட்சுமி பாய் கதையை படமாக்க வேண்டும் என்பது எனது 10 ஆண்டு கனவு. இதற்காக ஏகப்பட்ட ஆய்வுகள் மேற்கொண்டு இந்த கதையை தயார் செய்தேன். அப்படி நான் தயார் செய்த ஒட்டுமொத்த கதையையும் மொத்தமாக கங்கனா எடுத்து கொண்டு போய்விட்டார்" என்கிறார்.