ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'பாகுபலி 2' படம் எவ்வளவு பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்று வருகிறது என்பதைப் பற்றி இதற்குமேல் சொல்லித்தான் மக்களுக்குப் புரிய வேண்டும் என்பதில்லை. 'பாகுபலி' படத்தின் முதல் பாகமும் பெரிய வெற்றியைப் பெற்று 700 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளியது. இரண்டு பாகங்களிலும் பல விஷயங்கள் பிரமாதமாகப் பேசப்பட்டன. அவற்றில் படத்தின் இசையும் ஒன்று. படத்தின் இயக்குனர் ராஜமௌலியின் உறவினரான பிரபல இசையமைப்பாளர் கீரவாணி என்கிற மரகதமணி தான் இரண்டு பாகங்களுக்கும் இசையமைத்திருந்தார்.
தெலுங்கில் நேரடியாக எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ஆனால், 'பாகுபலி 2' படத்தின் மலையாளப் பதிப்பில் பாடுவதற்கு பிரபல பாலிவுட் பாடகி மறுத்துவிட்டார் என்ற தகவலை இசையமைப்பாளர் கீரவாணி இப்போது வெளியிட்டுள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு 'பாகுபலி 2' பற்றி ஹிந்தி, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளிலும் மிகப் பெரும் படம் என ராம்கோபால் வர்மா பதிவிட்டதற்குப் பதிலளித்த கீரவாணி, “இது உண்மை என்றால், பிரபலமான ஹிந்தி பாட(கி)கர் மலையாளத்தில் பாட அழைத்த போது அதை அவமானமாகவும், எரிச்சலாகவும் கருதியது எனக்கு ஆச்சரியமளிக்கிறது,” எனக் கூறியுள்ளார்.
அவர் ஆங்கிலத்தில் 'சிங்கர்' என குறிப்பிட்டுள்ளதால் அது பாடகரா அல்லது பாடகியா என்பது தெரியவில்லை. மேலும் அவர் யார் என்றும் பெயரைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டார். படம் வெளியான இத்தனை நாட்களுக்குப் பிறகு இது பற்றி கீரவாணி கூறியிருப்பதும் ஆச்சரியமானதுதான்.